Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்களவை தேர்தல் : அருணாச்சலப் பிரதேசத்தில் பதிவான முதல் வாக்கு

ஏப்ரல் 06, 2019 09:46

லோகித்புர்: நாட்டின் 17-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 

மக்களவை தேர்தலில் முதல் வாக்குப்பதிவு துவங்கியது. முதன்முதலில் இந்த தேர்தலில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். அருணாசல பிரதேசத்தில் உள்ள லோகித்புர் மலை கிராமத்தில் தபால் வாக்குகளை பதிவு செய்தனர் பாதுகாப்பு படையினர். இந்தோ - திபெத் எல்லை காவல் படையை சேர்ந்த வீரர் ஒருவர் தன் தபால் வாக்கை முதலாவதாக பதிவு செய்தார். எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்காக அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித்பூரில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.  


 

தலைப்புச்செய்திகள்